Friday, 24 March 2017
இரட்டை இலையை முடக்க யார் காரணம்: பழனிசாமி
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தினகரனை வெற்றி பெற செய்ய வேண்டும் என முதல்வர் இடைப்பாடி பழனிசாமி பேசினார்.தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் பழனிசாமி பேசியதாவது, இரட்டை இலையை முடக்க யார் காரணம் என்பதை மக்கள் எண்ணி பார்க்க வேண்டும். மறைந்த ஜெயலலிதா இடத்தை நிரப்பவே ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் போட்டியிடுகிறார். ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்ற அ.தி.மு.க. அம்மா அணி வேட்பாளரான தினகரனை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பிரிட்டன் பார்லி. அருகே தாக்குதலுக்கு: ஐ.எஸ்.பொறுப்பேற்பு
லண்டன்: லண்டன் நகரில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் பாலம் அருகே, மர்ம மனிதன் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் பலியாயினர் 12 பேர் காயம் அடைந்தனர். சுதாரித்த போலீசார் அவன் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அவன் பலியானான். பாலத்திற்கு மிக அருகில், அந்நாட்டு பார்லிமென்ட் அமைந்துள்ளதால், துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும், பார்லிமென்ட் ஊழியர்கள் பீதியடைந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டனர். இ்ந்நிலையில் இத்தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது. மேலும் பிரிட்டன் போலீசார் விசாரணை நடத்தி தாக்குதலுக்கு தொடர்புள்ளதாக 8 பேரை கைது செய்துள்ளனர்.டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்பு ஏன்: அமைச்சர் சித்து விளக்கம்
சண்டிகர்: எனது குடும்பத்தை நடத்துவதற்காக டிவி நிகழ்ச்சிகளில் தோன்றி வருவதாக பஞ்சாப் அமைச்சர் சித்து கூறியுள்ளார்.முன்னாள் கிரிக்கெட் வீரரான சித்து, தனியார் டிவியில் நிகழ்ச்சி ஒன்றை நீண்ட நாட்களாக நடத்தி வருகிறார். பஞ்சாபில் அமைச்சராக பதவியேற்ற பின்னரும் அந்த நிகழ்ச்சியில் சித்து கலந்து கொண்டார்.. இது குறித்து முதல்வர் அம்ரீந்தர் சிங் சட்ட வல்லுநர்களிடம் கருத்து கேட்டார்.இது குறித்து விளக்கமளித்த சித்து கூறியதாவது: அம்ரீந்தர் செய்வது எப்போதும் சரியாக இருக்கும். எனது குடும்பத்தை நடத்துவதற்காகவும், அவர்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் டிவி நிகழ்ச்சியில் தோன்றி வருகிறேன் என்றார்சேகர் ரெட்டியிடம் 5 நாள் விசாரணை: அமலாக்கத்துறை மனு
சென்னை: சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம் குமார் ஆகியோரை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனக்கூறி அமலாக்கத்துறையினர், சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பாக சேகர் ரெட்டி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை ஜாமினில் விடுதலை செய்ய கோர்ட் உத்தரவிட்டது. ஜாமினில் வெளிவந்த 3வது நாள் மீண்டும் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1,748 கோடி ஒதுக்கீடு
புதுடில்லி: தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1,748.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் கூறியுள்ளார்.தமிழகத்தில் கடுமயைான வறட்சி நிலவுகிறது. இதற்காக ரூ.39,565 கோடி நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. தொடர்ந்து மத்திய குழு தமிழகத்தில் ஆய்வு நடத்தியது. தொடர்ந்து மத்திய அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. தமிழகத்திற்கு ரூ.2,096.80 கோடி வழங்க வேண்டும் என பரிந்துரை செய்திருந்தது.வேளாண் தொழில்நுட்பத்திற்கு நெல்லை பல்கலை அனுப்புகிறது சாட்டிலைட்
திருநெல்வேலி: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்களை அறிய 7.67 கோடி ரூபாய் செலவில் விண்ணில் சாட்டிலைட் செலுத்தி ஆராய்ச்சி மேற்கொள்ளப்போவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் கி.பாஸ்கர் தெரிவித்தார்.திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட உள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், கட்டுமானங்கள் குறித்து துணைவேந்தர் கி.பாஸ்கர் கூறியதாவது:நெல்லை பல்கலையில் தற்போது சுற்றுச்சுவர் இல்லை. 75 லட்சம் ரூபாய் செலவில் புதிய சுற்றுச்சுவர் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம். பல்கலை வளாகத்தில் செயல்படும் "ஞானவாணி' மாணவர் வானொலிக்கு ரூ 75 லட்சம் செலவில் புதிய ஒலிபரப்பு கட்டடம் கட்டும் பணி துவங்கியுள்ளது. மேலும்3 ஆயிரம் மாணவர் அமரும் வகையில் 14 கோடி ரூபாய் செலவில் பல்நோக்கு அரங்கம் கட்ட உள்ளோம்.
பல்கலையில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் சூரிய சக்தியை கொண்டு சோலார் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை 13.50 கோடி ரூபாய் செலவில் துவக்க உள்ளோம். இதன் மூலம் 3 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இதில் பல்கலையின் தேவையான ஒரு மெகாவாட்டை தவிர மீதத்தை மின்வாரியத்திற்கு விற்பனை செய்வோம். பல்கலை வளாகத்தில் 200 கோடி ரூபாய் செலவில் மையப்படுத்தப்பட்ட கருவி மயமாக்கல் வசதியும், 100 கோடி ரூபாய் செலவில் விளையாட்டு கிராமமும் ஏற்படுத்த உள்ளோம். நெல்லை பல்கலை மாணவர்களின் ஆராய்ச்சிக்கு உதவும் நோக்கில் 7.67 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து மனோசாட் என்ற ஒரு சேட்டிலைட்டை விண்ணில் செலுத்த உள்ளோம். இதன் மூலம் தமிழக விவசசாயிகள் பயன்படும் வகையில் வேளாண்துறையில் நோய்த்தடுப்பு முறைகள், புதிய நுட்பங்கள், காலமுறைக்கு ஏற்பட்ட விவசாயம் போன்றவற்றை கண்டறிவோம் என்றார். பேட்டியின் போது பல்கலை பதிவாளர் ஜான் டி பிரிட்டோ உடன் இருந்தார்.






