No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture

Saturday, 21 January 2017

தயார் நிலையில் அலங்காநல்லூர் வாடிவாசல்!

மதுரை : அவசரசட்டம் இயற்றிய பின் ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக அலங்காநல்லூர் வாடிவாசல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மதுரை கலெக்டர் வீரராகவராவ் வாடிவாசலை ஆய்வு செய்தார்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் இளைஞர்கள் படை போராட்டம் நடத்தி வருகிறது. கடந்த 5 நாட்களாக தமிழகம் முழுவதும் நடத்தி வரும் அறவழி போராட்டத்தால் மத்திய, மாநில அரசுகள் மிரண்டன.

இதனையடுத்து அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டி டில்லி சென்ற தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு பிரதமர் மோடி கை விரித்தார். இருப்பினும் மாநில அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார். இதன்பின் சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து காட்சிப்படுத்த கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கும் வகையில் சட்ட வரைவு தயாரிக்கப்பட்டது. இதனை மத்திய அமைச்சகங்களின் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. இந்த சட்ட வரைவுக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை, சட்ட துறை, உள்துறை அமைச்சகங்கள் அனைத்தும் ஒப்புதல் அளித்தன.

தமிழக கவர்னர் மும்பையிலிருந்து வித்யாசாகர் ராவ் மும்பையிலிருந்து இன்று சென்னை திரும்புகிறார். அவரின் ஒப்புதலுக்கு பின் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வசதியாக, இன்று(ஜன.,21) அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டால், நாளை(ஜன.,22), அலங்காநல்லுாரில், ஜல்லிக்கட்டு நடத்த, அரசு முடிவு செய்துள்ளது.

இதனையடுத்து ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக அலங்காநல்லூர் வாடிவாசலை தயார் செய்யும் பணி முடுக்கி விடப்பட்டு தயார் செய்யப்பட்டது. மதுரை கலெக்டர் வீரராகவராவ், அலங்காநல்லூர் வாடிவாசலை நேற்று(ஜன.,20) ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாரிடம் கலந்தாலோசித்தார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் ‛ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary:

Madurai, ordinance enacted in order to hold back Alanganallur jallikattu banner been placed on standby. Madurai Collector T.M.Veeraraghav examined. 
Share:

Related Posts:


Daily Tamil News. Powered by Blogger.
554857

Contributors

Search This Blog