மகாராஷ்டிராவில் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட 26 நக்சலைட்டுகளில், அந்த அமைப்பின் முக்கிய தலைவர் மிலிந்த் டெல்தும்டே-வும் ஒருவர் என அம்மாநில காவல் துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் 'சி-60' என்ற சிறப்பு கமாண்டோ படையினர் என்கவுன்டரொன்றை நடத்தியிருந்தனர். அதில் நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஆண்கள் 20 பேர், பெண்கள் 6 பேர் என மொத்தம் 26 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. இதற்கிடையே மிக முக்கியமான எல்கர் பரிஷத் வழக்கில் தொடர்புடைய நக்சல் அமைப்பின் தலைவர் மிலிந்த் டெல்தும்டே-வும் ஒருவர் என காவல் துறை தெரிவித்துள்ளது. தொடர்புடைய செய்தி: மகாராஷ்டிரா: வனப்பகுதியில் பதுங்கியிருந்த 26 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வரும் எல்கர் பரிஷத் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மிலிந்த் டெல்தும்டே தலைமறைவானவராக அறிவிக்கப்பட்டிருந்தார் என்றும் காவல் துறை கூறியுள்ளது. பீமா கோரேகான் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆனந்த் டெல்தும்டே-வின் சகோதரர் மிலிந்த் டெல்தும்டே என்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/SCTZYF
Sunday, 14 November 2021
Home »
» மகாராஷ்டிரா போலீஸ் என்கவுன்டரில் முக்கிய நக்சல் தலைவர் உயிரிழப்பு
மகாராஷ்டிரா போலீஸ் என்கவுன்டரில் முக்கிய நக்சல் தலைவர் உயிரிழப்பு
Related Posts:
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!