புதுடில்லி:ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு மகன் லோகேஷ் அமைச்சராக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் அமைச்சராக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Monday, 27 March 2017
Monday, 23 January 2017
ஹீராகாண்ட் எக்ஸ்பிரஸ் விபத்து : பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

32 பேர் பலி:
சத்தீஷ்கர் மாநிலம் ஜகதால்பூரில் இருந்து ஆந்திரா வழியாக ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் செல்லும் ஹீராகாண்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் குனேரு என்ற இடத்தில் வந்தபோது எதிர்பாராத விதமாக தடம் புரண்டது. ரெயில் என்ஜினும் அதனைத்தொடர்ந்து உள்ள 7 பெட்டிகளும் தடம் புரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி கவிழ்ந்தது. இந்த பெட்டிகளில் பயணம் செய்த 32 பயணிகள் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படு காயம் அடைந்தனர்.
மீட்பு பணி துரிதம்:
தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினரும், ரெயில்வே உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர். மருத்துவ குழுவினரும் சம்பவ இடத்தில் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
ரூ.5 லட்சம் இழப்பீடு:
இந்நிலையில் ஹீராகாண்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் பலியான குடும்பத்தினருக்கு அம்மாநிலமுதல்வர் சந்திர பாபு நாயுடு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு விபத்தில் பலியான குடும்பத்தினருக்கு மத்திய அரசு சார்பில் தலா ரூ2.லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
English summary:
Hyderabad: hirakhand express, Chandra Babu Naidu, Chief Minister of the accident victim's family said that a compensation of Rs 5 lakh.
Thursday, 12 January 2017
பன்னீர் பயணம் வெற்றி: தமிழக ‛தாகம் தீர்க்க' ஆந்திரா முடிவு

தெலுங்கு கங்கை திட்டத்தின்படி சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை இன்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இது வரை யாரும் எடுக்காத முயற்சியாக முதல் முறையாக ஆந்திராவுக்கு நேரில் சென்று ஓ.பி.எஸ்., நடத்திய பேச்சுக்கு ஒரு நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது. குடிநீர் தேவை பற்றி விவாதிப்பதற்காகவும், தெலுங்கு கங்கை திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் ஆந்திர தலைநகர் அமராவதிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஜனவரி 12) காலை மூத்த அமைச்சர்களுடன் சென்றார் . அங்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அவர் சந்தித்துப் பேசினார் .
எம்.ஜி.ஆர்., - என்.டி.ராமராவ்:
தெலுங்கு கங்கை நீர் பங்கீடு தொடர்பாக ஆந்திரா சென்று, அம்மாநில முதல்வருடன் தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு இரண்டு மாநிலங்களுக்கும் இடையே கடிதப்போக்குவரத்து மட்டுமே இருந்து வந்தது. தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தத்தின்படி ஆந்திர விவசாயிகளின் பங்களிப்பாக ரூ.400 கோடி தமிழகம் கொடுக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் எம்.ஜி.ஆர்., - என்.டி.ராமராவ் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் போடப்பட்டது.இன்று நடத்திய பேச்சில் , தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி., தண்ணீர் தர ஆந்திரா சம்மதம் தெரிவித்தது. இது தொடர்பாக அடுத்த வாரம் திருப்பதியில் உயர் அதிகாரிகள் கொண்ட முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. திட்டம் தொடர்பாக பராமரிப்பு செலவு ரூ. 433 கோடியை வழங்குவது தொடர்பாக பேசவும் திட்டமிடப்பட்டுள்ளது. இன்று வந்திருக்கும் முடிவால் சென்னை குடி நீர் பிரச்சனையை தீர்க்க முடியும். தமிழகத்தின் தரப்பில் 4 டி.எம்.சி., தண்ணீர் கேட்டாலும் , ஆந்திரா அரசு 2. 5 டி.எம்.சி தண்ணீராவது தர ஆந்திரா சம்மதித்திருப்பது நல்ல தகவலாக சென்னை மக்களுக்கு கிடைத்திருக்கிறது.
English summary:
Chennai: Tamil Nadu Chief Minister opies., Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu talks with nearly 2. 5 tmc, water quality, AP informed consent.
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு : தமிழக முதல்வர் இன்று ஆந்திரா பயண

குடிநீர் தேவை பற்றி விவாதிப்பதற்காகவும், தெலுங்கு கங்கை திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் ஆந்திர தலைநகர் அமராவதிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஜனவரி 12) செல்கிறார். அங்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அவர் சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பு வேலகபுடியில் உள்ள இடைக் கால அரசு வளாகத்தில் பிற்பகல் 1 மணிக்கு நடைபெறுவதாக கூறப்படுகிறது. சந்திரபாபு நாயுடுவின் ஆலோசனையை ஏற்று இந்த பேச்சுவார்த்தைக்கு ஓ.பன்னீர்செல்வம் செல்வதாக கூறப்படுகிறது.
தெலுங்கு கங்கை நீர் பங்கீடு தொடர்பாக ஆந்திரா சென்று, அம்மாநில முதல்வருடன் தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு இரண்டு மாநிலங்களுக்கும் இடையே கடிதப் போக்குவரத்து மட்டுமே இருந்து வந்தது. தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தத்தின்படி ஆந்திர விவசாயிகளின் பங்களிப்பாக ரூ.400 கோடி தமிழகம் கொடுக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் எம்.ஜி.ஆர்., - என்.டி.ராமராவ் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் போடப்பட்டது.
English summary:
Chennai: Telugu Ganga project in relation to the opening of Krishna water to Madras, Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu today met Tamil Nadu Chief opannircelvam there.
Friday, 6 January 2017
நோபல் பரிசு பெறும் விஞ்ஞானிகளுக்கு ரூ.100 கோடி பரிசு
திருப்பதி : ''நோபல் பரிசு பெறும், ஆந்திர விஞ்ஞானிகளுக்கு, 100 கோடி ரூபாய் பரிசளிக்கப்படும்,'' என, அம்மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான, சந்திரபாபு நாயுடு அறிவித்து உள்ளார்.

இந்திய அறிவியல் மாநாடு:
ஆந்திர மாநிலத்தில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த, சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். இங்குள்ள திருப்பதியில், இந்திய அறிவியல் மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் துவக்கி வைத்தார். ஐந்து நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட, உலக நாடுகளைச் சேர்ந்த, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் உட்பட, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பங்கேற்றுள்ளனர்.
மெகா பரிசு:
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, குழந்தைகளுக்கான அறிவியல் மாநாட்டை துவக்கி வைத்த, முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், ''நோபல் பரிசு பெறும், வருங்கால ஆந்திர விஞ்ஞானிகளுக்கு, 100 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும்,'' என்றார். வழக்கமாக, நோபல் பரிசுடன், 5.96 கோடி ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். அதைவிட பல மடங்கு அதிகமான தொகையை, சந்திரபாபு நாயுடு பரிசாக அறிவித்துள்ளார்.
English summary:
Tirupati: '' will receive the Nobel Prize, AP scientists, prize as 100 crore, '' as the state chief minister and Telugu state Party leader Chandrababu Naidu has announced.

இந்திய அறிவியல் மாநாடு:
ஆந்திர மாநிலத்தில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த, சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். இங்குள்ள திருப்பதியில், இந்திய அறிவியல் மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் துவக்கி வைத்தார். ஐந்து நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட, உலக நாடுகளைச் சேர்ந்த, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் உட்பட, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பங்கேற்றுள்ளனர்.
மெகா பரிசு:
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, குழந்தைகளுக்கான அறிவியல் மாநாட்டை துவக்கி வைத்த, முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், ''நோபல் பரிசு பெறும், வருங்கால ஆந்திர விஞ்ஞானிகளுக்கு, 100 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும்,'' என்றார். வழக்கமாக, நோபல் பரிசுடன், 5.96 கோடி ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். அதைவிட பல மடங்கு அதிகமான தொகையை, சந்திரபாபு நாயுடு பரிசாக அறிவித்துள்ளார்.
English summary:
Tirupati: '' will receive the Nobel Prize, AP scientists, prize as 100 crore, '' as the state chief minister and Telugu state Party leader Chandrababu Naidu has announced.
Thursday, 8 December 2016
டிஜிட்டல் பண பரிவர்த்தனையின் சிக்கல்களை நீக்க, சந்திரபாபு தலைமையிலான குழு ஆலோசனை

இதுதொடர்பாக, ஆந்திர மாநிலம், அமராவதியில் அந்த மாநில முதலமைச்சரும் குழுவின் தலைவருமான சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: கடந்த நவம்பர் 8 தேதி நள்ளிரவு அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களான 500,1000 செல்லாது என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினால் மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்தும், இதற்கு உரிய தீர்வு காணும் வகையில் இந்தக் கூட்டத்தில் விரிவான விவாதம் நடத்தப்படும். குறிப்பாக ரொக்கப் பரிவர்த்தனைக்கு மாற்றாக மின்னணு பணப் பரிவர்த்தனை முறைக்கு மாற வேண்டியது குறித்து இக்கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிப்பதற்கு மின்னணு முறை பணப் பரிவர்த்தனை சிறந்த தீர்வாக அமையும் என்று நம்புகின்றோம்.
இதனை செயல்படுத்த நாடு முழுவதும் ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒருவருக்காவது மின்னணு பணப் பரிவர்த்தனை குறித்து கற்பிக்க வேண்டியது அவசியம் என்றார் அவர்.
அப்போது, மின்னணு முறை பணப் பரிவர்த்தனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்த சந்திரபாபு நாயுடு, "மாற்றம் தவிர்க்க முடியாதது என்று கூறினார்.
மேலும், ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு இருப்பதால், சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். எனவே, நமது தேசம் மின்னணு பொருளாதாரத்துக்கு மாற வேண்டியது தவிர்க்க முடியாதது' என்று சந்திரபாபு நாயுடு உறுதிபட கூறினார்.
English summary
Mumbai: Electronic funds Transfer Panel meet here today. They discuss about developing e-fund transfer transaction in the country.