![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdj_shUfjH3PgbvFKw3bFoWHA_F8JHkOQnRqdutquNQradrTNF2Qan2ilJX5HcD83DWCKbPCFq3KRWsYHzbGoKdvYD2vuoT3VdzfZp2dPCbUZrGVQFdUdN0_VU8G8E5QUQ9jPD7-P4A78/s1600/Tamil_News_large_1739390_318_219%255B1%255D.jpg)
எம்.பி.,க்கு வந்த சிக்கல் :
மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிவசேனா எம்.பி.,யான ரவீந்திர கெய்க்வாட், சில நாட்களுக்கு முன் விமான பயணம் செய்தார். அவருக்கு இருக்கையை மாற்றிக் கொடுத்தது தொடர்பாக விமான நிறுவன ஊழியருக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த எம்.பி., விமான ஊழியரை செருப்பால் அடித்துள்ளார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ரவீந்திர கெய்க்வாட் விமானத்தில் பயணம் செய்ய ஏர்இந்தியா உள்ளிட்ட 7 விமான நிறுவனங்கள் தடை விதித்தன.
விமான நிறுவனம் செய்தது சரியே :
இது தொடர்பாக லோக்சபாவில் சிவசேனா எம்.பி.,க்கள் இன்று குரல் எழுப்பினர். சிவசேனாவிற்கு ஆதரவாக சமாஜ்வாதி கட்சியினரும், எம்.பி., பயணத்திற்கு தடை விதிக்கும் அதிகாரம் விமான நிறுவனத்திற்கு இல்லை என பேசினர். அப்போது பேசிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ, சிறந்த பாதுகாப்பு விதிமுறைகளை விமான அமைச்சகம் செய்துள்ளது. விமான நிறுவனம் நடந்து கொண்ட விதம் சரியானதே. இது போன்ற பிரச்னையில் எம்.பி.,ஒருவர் சிக்கியது தான் துரதிஷ்டவசமானது என்றார். இந்த விவகாரம் தொடர்பாக சிவசேனா எம்.பி.,க்களும் லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
ரகசிய இடத்தில் எம்.பி., :
இதற்கிடையில் சர்ச்சையில் சிக்கிய சிவசேனா எம்.பி., ரவீந்திர கெய்க்வாட் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பார்லிக்கு வந்த அக்கட்சி எம்.பி.,க்களிடம் கேட்டதற்கு, அவர் மாயமான விவகாரம் தொடர்பா