நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கடந்த 3-ம் தேதி போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந்திருக்கிறது. தீர்ப்பு 20-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஆர்யன் கைதால் அவரது பெற்றோர் மனதளவில் உடைந்து போய் இருக்கின்றனர். எந்தவித நிகழ்ச்சியிலும் ஷாருக்கான் கலந்து கொள்ளாமல் இருக்கிறார். படப்பிடிப்புகளையும் ஒத்தி வைத்திருக்கிறார். தீபாவளிக்குள் ஆர்யன் ஜாமீனில் விடுதலையாகிவிடுவார் என்று ஷாரூக்கான் குடும்பம் நம்புகிறது. பக்ரீத் மற்றும் தீபாவளிக்காக ஆர்யன் கான் குடும்பத்தினர் வீடு முழுக்க அலங்கார மின்சார விளக்குகள் பொருத்தியிருக்கின்றனர்.
Also Read: ``ஏழைகளுக்கு சேவை செய்வேன்; தவறான வழியில் செல்ல மாட்டேன்"- ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஆர்யன் தனது பெற்றோருடன்
ஆனால் மின் விளக்கு ஆன் செய்யப்படாமல் இருக்கிறது. மகன் ஜாமீனில் வெளியில் வரவேண்டும் என்பதற்காக நவராத்திரியின் போது கவுரி கான் நோன்பு இருந்து பூஜைகள் செய்திருக்கிறார். சமையல்காரர்கள் மதிய உணவுக்காக சாப்பாட்டுடன் பாயாசமும் செய்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த கவுரி கான் உடனே பாயாசம் செய்வதை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார். ஆர்யன் சிறையில் இருந்து வெளியில் வரும் வரை எந்த வகையான இனிப்பையும் செய்ய வேண்டாம் என்று சமையல்காரர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள். தனது மகனின் நண்பர்கள் கவுரி கானுக்கு போன் செய்யும்போது ஆர்யனுக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளும்படி கவுரிகான் கேட்டுக்கொண்டார். கவுரி கான் தனது மகன் கைது செய்யப்பட்டு இருப்பதால் மிகவும் உடைந்து போய்விட்டதாக அவரது தோழிகள் தெரிவித்திருக்கின்றனர். ஷாருக்கான் தனது பாலிவுட் நண்பர்களிடம் வீட்டிற்கு வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அதேசமயம் அனைவரிடமும் ஷாருக்கான் போனில் தொடர்பில் இருப்பதாக அவரது நண்பர்கள் தெரிவித்திருக்கின்றனர். மேலும் தனது மகன் கைது விவகாரத்தில் விசாரணை ஏஜென்சிக்கு ஷாருக்கான் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
http://dlvr.it/S9wFJb
Wednesday, 20 October 2021
Home »
» ``மகன் ஆர்யன் கான் சிறையிலிருந்து வரும் வரை" வீட்டு வேலையாட்களுக்கு கவுரி கானின் புது உத்தரவு?
``மகன் ஆர்யன் கான் சிறையிலிருந்து வரும் வரை" வீட்டு வேலையாட்களுக்கு கவுரி கானின் புது உத்தரவு?
Related Posts:
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!