No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture

Saturday, 8 July 2023

மகளிருக்கான உரிமைத்தொகை திட்டம்: `யார் யாரெல்லாம் தகுதி பெறுவார்கள்?' - முழுத் தகவல்கள்

தமிழ்நாட்டின் 2021 சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் மிக முக்கியக் கவனம் பெற்றது பெண்களுக்கான உரிமைத்தொகை திட்டம். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தத் திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பிவந்தன. இந்த நிலையில், அண்ணா பிறந்தநாளில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.உரிமைத்தொகைத் திட்டம் இது குறித்து உரிமைத்தொகை ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், "இந்தியாவில் பெண்களுக்கு முதன்முதலில் சொத்துரிமை வழங்கியது கலைஞர் கருணாநிதி ஆட்சியின்போதுதான். பெண்களுக்கான கல்வியில் தனிக்கவனம் செலுத்தியதும், அவர்களுக்கான திருமண உதவித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கருணாநிதி செயல்படுத்தியிருக்கிறார். நான் முதல்வராகப் பதவியேற்றபோது போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம். இந்தத் திட்டம் பெண்களின் பொருளாதாரத்துக்குப் பெரும் உதவியாக இருப்பதைக் காண்கிறோம். இப்படிப் பெண்களுக்காக சிறப்புக் கவனம் செலுத்துவதுதான் திராவிடக் கட்சி. அதனால்தான், மகளிருக்கான உரிமைத்தொகை திட்டத்துக்கு 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், மீனவ மகளிர், கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் பெண்கள், சிறிய கடைகள், சிறு குறு நிறுவனத்தில் சொற்ப ஊதியத்துக்குப் பணிசெய்யும் மகளிர், ஒன்றுக்கு அதிகமான வீட்டு வேலைக்குப் பணிக்குச் செல்லும் பெண்கள் பயன்பெறுவார்கள்.முதல்வர் ஸ்டாலின் இந்தத் திட்டத்துக்காக ஒன்றரைக் கோடி மனுக்கள் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் சாலையோரம் இருக்கும் பெண்கள்கூடப் பயன்பெற முடியும். அதற்கேற்றவாறுதான் இந்தத் திட்டம் வடிவமைப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்க குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்ற தரவுகள் இல்லையென்றாலும், உரிமைத்தொகை பெறுவதற்குரிய ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர்கள் செய்து, உரிய பயனாளர்களுக்கு உரிமைத்தொகை வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். இதற்காக சிறப்பு முகாம்கள் அமைத்து மனுக்களைப் பெற வேண்டும். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். இந்தத் திட்டம் குறித்து உதவி தேவைப்பட்டால் தலைமைச் செயலகத்தில் தெரிவிக்கலாம். மேலும், அமைச்சர் உதயநிதியையோ என்னையோ அழைத்தும் உதவிகள் பெறலாம்" எனத் தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு `கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட'த்தில் பயன் பெறுபவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறை அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில்...முதல்வர் ஸ்டாலின் விண்ணப்பிக்கும் நடைமுறைகள்: * குடும்பத் தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற, கீழ்க்காணும் தகுதிகளைப் பெற்ற குடும்பங்களில், 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். அதாவது, செப்டம்பர் 15, 2002 தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். * இந்தத் திட்டத்துக்கு பொது விநியோக நியாயவிலைக் கடைகள் கணக்கெடுப்புக்குப் பயன்படுத்திக்கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக் கடை அமைந்திருக்கும் விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். * ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர். குடும்பத்தலைவி வரையறை: * குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றிருப்பவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர். * ஒவ்வொரு தகுதிவாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத்தலைவி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். * குடும்ப அட்டையில் குடும்பத்தலைவர் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் பெண் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார். பெண்கள் * குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தக் குடும்பத்தலைவரின் மனைவி குடும்பத்தலைவியாகக் கருதப்படுவார். * திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர். * ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற, ஒரு நபரைக் குடும்ப உறுப்பினர்கள் தேர்வுசெய்து விண்ணப்பிக்கச் செய்யலாம். பொருளாதாரத் தகுதிகள்: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் குடும்பங்கள் கீழ்க்காணும் மூன்று பொருளாதார அளவுகோல்களுக்கு உட்பட்ட குடும்பங்களாக இருத்தல் வேண்டும். * ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள். * ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்திருக்கும் குடும்பங்கள். * ஆண்டுக்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள். (பொருளாதாரத் தகுதிகளுக்காகத் தனியாக வருமானச் சான்று அல்லது நில ஆவணங்களைப் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கத் தேவையில்லை)குடும்ப அட்டை கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறத்தகுதி இல்லாதவர்கள்: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்களில் யாரேனும், கீழ்க்காணும் ஏதாவது ஒரு வகையைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களாக இருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர், மகளிர் உரிமைத்தொகை பெறத் தகுதி இல்லாதவர் ஆவர். * ரூபாய் 2.5 லட்சத்துக்குமேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள். * குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சம் மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள். * ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்குமேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர். * மாநில, ஒன்றிய அரசு ஊழியர்கள் / பொதுத்துறை நிறுவனங்கள்/வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள். * தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர). அதாவது பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சிமன்றத் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள். பெண்கள்...!! * சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள். * ஆண்டுக்கு 50 லட்சத்துக்கும்மேல் ஆண்டு விற்பனை (Annual Turnover) செய்து சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள். * ஏற்கெனவே முதியோர் ஓய்வூதியம் (OAP), விதவை ஓய்வூதியம், அமைப்பு சாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள். மேற்கண்ட ஏதாவது ஒரு தகுதியின்மை வகைப்பாட்டில் வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறத் தகுதி இல்லை. விதிவிலக்குகள்: மாற்றுத் திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் கடும் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் உறுப்பினரைக்கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவை. இவ்வகைப்பாட்டினர், திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்திசெய்து, எவ்விதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறது.மணிப்பூர் போராட்டத்தில் முக்கியத்துவம் பெறும் பெண்கள்! - பின்னணி என்ன?
http://dlvr.it/SrsM4S
Share:

Related Posts:


Daily Tamil News. Powered by Blogger.
539290

Contributors

Search This Blog