Tuesday, 22 November 2016
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றத்தில் அதிமுக முன்னிலை
சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடந்த, நான்கு சட்டசபை தொகுதிகளில், பதிவான ஓட்டுக்கள் எண்ணும்பணி துவங்கியது. இதில், திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக முன்னிலையில் உள்ளது. புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் முதல்வர நாராயணசாமி முன்னிலையில் உள்ளார்.
நெல்லித்தோப்பில் 3 சுற்றுக்களாக ஓட்டுக்கள் எண்ணும் பணி துவங்கியது. அரவக்குறிச்சியில் 18, திருப்பரங்குன்றத்தில் 21 சுற்றுக்களாகவும், தஞ்சாவூரில் 20 சுற்றுக்களாகவும் ஓட்டுக்கள் எண்ணப்பட உள்ளன. இங்கு கடந்த 19ம் தேதி தேர்தல் நடந்தது.
முன்னதாக, அரக்குறிச்சி தேர்தல் ஓட்டு எண்ணும் மையத்தில் போதிய இடவசதி இல்லாததை கண்டித்து மையம் முன் பா.ஜ. மற்றும் தே.மு.தி.க.வினர்கள் முற்றுகையிட்டனர். மதுரை மருத்துவ கல்லூரி வளாகத்தில் திருப்பரங்குன்றம் தொகுதியில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. இந்த அறையை அதிகாரிகள் திறக்க முற்பட்ட போது, சுயேட்சை வேட்பாளருக்கு காயம் ஏற்பட்டது. தி.மு.க., வேட்பாளர் சரவணன், உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
கண்காணிப்பு கேமரா :
ஒவ்வொரு தொகுதியிலும், 225 பணியாளர்கள், ஓட்டு எண்ணிக்கைக்கு பயன்படுத்தப்பட உள்ளனர். ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மேஜையில், ஒரு மைக்ரோ பார்வையாளர் இருப்பார். மேற்பார்வையாளர், உதவியாளர், மைக்ரோ பார்வையாளர், ஓட்டு எண்ணும் பணியாளர், தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ள நபர், தேர்தல் நடத்தும் அதிகாரி, வேட்பாளர்கள், முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஓட்டு எண்ணிக்கை, வீடியோவில் பதிவு செய்யப்படும். ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மேஜை ஒவ்வொன்றிலும், கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். காலை, 9:00 மணியில் இருந்து, முடிவுகள் வெளிவரத் துவங்கும்.
மொபைல் போனுக்கு தடை :
ஓட்டு எண்ணிக்கை மையத்திற்குள், மொபைல் போன் எடுத்து செல்ல அனுமதி கிடையாது. தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவை அறிவிப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட தொகுதி பார்வையாளரிடம் இருந்து, ஒப்புதல் பெற வேண்டும். அத்துடன், வட மாநிலங்களில், நான்கு லோக்சபா தொகுதிகளுக்கும், ஆறு சட்டசபை தொகுதிகளுக்கும், 19ல் நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகளும், இன்று காலை, 8:00 மணிக்கு எண்ணப்படுகின்றன.
Monday, 21 November 2016
திரை நட்சத்திரத்திலிருந்து சின்னத்திரை தொடர் தயாரிப்பாளராக - ஒரு பெண் கலைஞரின் விஸ்வரூபம்
ஆணாதிக்கம் மிகுந்ததாகக் கருதப்படும் தமிழ்த் திரையுலகிலும், சின்னத் திரையுலகிலும் பெண்கள் வெற்றி பெறுவது அரிதாகவே நடக்கிறது. அதிலும், பெண்களுக்கு என்று ‘ஒதுக்கி வைக்கப்பட்ட’ நடிப்பு , பாடல் போன்ற சில துறைகளை தவிர இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் போன்ற வேலைகளில் பெண்களின் செயல்பாடும் வெற்றி பெறுவதும் குறைவே.
ஆனால் ராதிகா ஒரு விதிவிலக்கான வெற்றிக்கதை.

எழுபதுகளின் இறுதியில் இளம் பெண்ணாக திரையுலகில் நுழைந்த ராதிகா சரத்குமார், 38 ஆண்டுகளுக்குப் பிறகும் சினிமா, தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் என வலம் வருகிறார்.
1993ல் வெளிவந்த கிழக்குச் சீமையிலே திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றிருந்த நேரம். விருமாயியாக அந்தப் படத்தில் நடித்திருந்த ராதிகாவுக்கு எல்லாத் திசைகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துகொண்டிருந்த. 94ஆம் வருடத்தில் 6 படங்கள்; 95ஆம் வருடத்தில் 8 படங்கள் என நடித்துக் குவித்தார் அவர்.
பாதை மாற்றம்:
இம்மாதிரியான சூழலில் யாருமே தொடர்ந்து சினிமாவில்தான் தீவிர கவனம் செலுத்தியிருப்பார்கள். ஆனால், ராதிகா சற்று நிதானமாக யோசித்தார். இப்படியே எவ்வளவு நாள் ஓட முடியும்? முதல் குழந்தையான ரெயான் பிறந்து சில மாதங்களே ஆகியிருந்தன. பாதையை மாற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தார் ராதிகா.
அந்த யோசனையில் பிறந்ததுதான் ராடன் டிவி. தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரிக்கும் நிறுவனம். ஜெயா டீவியின் முந்தைய அவதாரமான ஜேஜே டிவியில் பாலைவனப் புயல் என்ற தொடரைத் தயாரித்தார் ராதிகா. ஏகப்பட்ட இழப்பு. எதிர்பாராத இழப்பு.
"நிறைய பேர் நான் டிவிக்கு செல்லக்கூடாது என்று சொன்னார்கள். ஆனால், என் தொழில்வாழ்க்கை என் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். நான் எதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோமோ அதைச் செய்ய முடியும் என்று தோன்றியது.
அப்படித்தான் டிவியில் நுழைந்தேன்" என்று துவங்குகிறார் ராதிகா.
ஆனால், ஒரு நடிகை தொலைக்காட்சி நிறுவனத்தைத் துவங்கி வெற்றிகரமாக தொடரைத் தயாரித்து அளிப்பார் என்ற நம்பிக்கை யாருக்கும் இல்லை. வங்கிகள், சேனல்கள் யாரும் நம்பவில்லை.
"ஒரு நடிகையாக என்னை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், வேலை என்று வரும்போது நீங்கள்ளாம் என்ன செய்ய முடியும் என்று ஆரம்பிப்பார்கள்.
நடிகைகளால் எதுவும் முடியாது என்று நினைப்பா்கள். என்னால் முடியும் என்று நிரூபிப்பதுதான் மிகப்பெரிய சவாலாக இருந்தது. அந்த சவாலை நான் ஏற்றுக்கொண்டேன்" என்கிறார் ராதிகா.
ராதிகா முதலில் எடுத்த தொலைக்காட்சித் தொடர் தோல்வியில் முடிந்திருந்தது. அந்த காலகட்டத்தில்தான் இந்தி மெகா தொடர்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, வெளியாகிக்கொண்டிருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக மெகா தொடர்களின் முகம் மாறிக்கொண்டிருந்தது.
சித்தியில் தொடங்கிய சின்னத்திரை பயணம்:
"கலாநிதி மாறன் என்னுடைய நல்ல நண்பர். ஆனால், என்னால் ஒரு சீரியலை தயாரிக்க முடியும் என்று நம்பவைக்க சில வருடங்கள் பிடித்தன" என்று நினைவுகூர்கிறார் ராதிகா.
அப்படி உருவான தொடர்தான் ’சித்தி’. சன் தொலைக்காட்சியில் தினமும் இரவில் ஒளிபரப்பான இந்தத் தொடர், மூன்று ஆண்டுகள் ஓடியது.
இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட பிராந்திய மொழி தொலைக்காட்சித் தொடர் என்ற பெருமையும் இந்தத் தொடருக்கு உண்டு.
தெலுங்கு மற்றும் சிங்கள மொழிகளிலும் இந்தத் தொடர் மொழிமாற்றம்செய்யப்பட்டு ஒளிபரப்பானது. உண்மையில் அந்தத் தொடருக்குப் பிறகு ராடன் நிறுவனம் தொலைக்காட்சித் தொடர்களின் போக்கையே மாற்றியது.
அதற்குப் பிறகு, ராதிகாவுக்கு முன்னோக்கிய பயணம்தான்.
"இந்தப் பயணத்தில் நடிகையாக இருப்பது உதவியிருக்கும் என பலரும் நினைக்கலாம். ஆனால், அதுதான் எனக்கு பெரிய தடையாக இருந்தது. நடிகைகளுக்கு மூளையே இவ்வளவுதான் என்று பலரும் நினைத்தார்கள்" என்று நினைவுகூர்கிறார் ராடன் மீடியா ஒர்க்ஸின் நிர்வாக இயக்குனரான ராதிகா.
’தொடர்’ வெற்றிகள்:
அதற்குப் பிறகு, அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி என தொடர்ச்சியாக 17 ஆண்டுகளாக தமிழ்த் தொலைக்காட்சியில் கோலோச்சிவருகிறார் ராதிகா. தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரிக்கும் ராடன் மீடியா ஒர்க்ஸின் கடந்த ஆண்டு விற்று முதல் மட்டும் சுமார் 35 கோடி ரூபாய்.
1978ல் கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகமான ராதிகா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் 210க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இன்னமும் நடித்துக்கொண்டும் இருக்கிறார்.
1994ல் தனிநபர் நிறுவனமாக துவங்கப்பட்ட ராடன் டிவி, 1999ல் கார்ப்பரேட் நிறுவனமானது. இந்த நிறுவனத்தின் மிக வெற்றிகரமான தொடர்களில் மையப் பாத்திரமாக ஒரு வலிமையான பெண்ணே இருப்பதாக கதைகள் இருக்கும். "பெண்கள்தான் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கிறார்கள் என்பது இதற்குக் காரணமல்ல. உண்மையில் எங்கள் தொடர்களை அதிகம் பார்ப்பது ஆண்கள்தான்" என்கிறார் ராதிகா.
திட்டமிடலில் ராணி:
விளையாட்டுப் பெண்ணாக சினிமாவில் நடிக்கத் துவங்கிய ராதிகா, தற்போது மிகத் திட்டமிட்டு வேலை பார்க்கும் ஒரு நபர். சினிமா, தொலைக்காட்சித் தொடர்கள், அலுவலகம் என்று மிக பரபரப்பாக இருந்தாலும் 6 மணிக்கு மேல் வேலை பார்ப்பதில்லை.
பல தொடர்களைத் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், நடிகை, ஒரு அரசியல் தலைவரின் மனைவி என பரபரப்பாக இருக்கும் ராதிகா, "ஆண்களைவிடப் பெண்களால் நேரத்தை சிறப்பாக கையாள முடியும்" என்கிறார்.
"என் வாழ்க்கையில் எதையும் திட்டமிட்டு செய்ததில்லை. நான் நடிகையானது, தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க ஆரம்பித்தது, தயாரிக்க ஆரம்பித்தது எல்லாமே அந்த நேரத்தில் முடிவெடுத்து உழைத்ததுதான். தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்." என்கிறார் ராதிகா.
உண்மையில் தான் எதிர்கொள்ளும் சவால்கள், தான் தேர்வு செய்த பாதையினால் வந்தவை என்கிறார் அவர். வெறும் நடிகையாக மட்டும் இருந்திருந்தால், இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்காது. ஆனால், இந்த உயரத்தையும் எட்டியிருக்க முடியாது என்கிறார் ராதிகா.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் எம்.ஆர். ராதாவுக்கும் இலங்கைத் தமிழரான கீதாவுக்கும் 1963ல் கொழும்பு நகரில் பிறந்தவர் ராதிகா. 1978ல் நடிக்க ஆரம்பித்து இப்போது நடித்துக்கொண்டிருக்கும் ராதிகா, சின்னத் திரை தொடர்களைத் தயாரிக்கும், டிவி கலை நிகழ்ச்சிகளை நடத்திக்கொடுக்கும் நிறுவனமான ராடன் மீடியா ஒர்க்ஸின் தலைவர். இவரது கணவர் சரத்குமார் பிரபல நடிகர், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர்.
English Summary:
The Tamil film personalities deemed to be very masculine, small cinema is very rare for women to succeed. Especially for women, the 'alienation' of acting, singing, except for some industries such as directors, producers will succeed in the work activity of women is small.
But Radhika is an exceptional success story.
ஆனால் ராதிகா ஒரு விதிவிலக்கான வெற்றிக்கதை.

எழுபதுகளின் இறுதியில் இளம் பெண்ணாக திரையுலகில் நுழைந்த ராதிகா சரத்குமார், 38 ஆண்டுகளுக்குப் பிறகும் சினிமா, தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் என வலம் வருகிறார்.
1993ல் வெளிவந்த கிழக்குச் சீமையிலே திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றிருந்த நேரம். விருமாயியாக அந்தப் படத்தில் நடித்திருந்த ராதிகாவுக்கு எல்லாத் திசைகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துகொண்டிருந்த. 94ஆம் வருடத்தில் 6 படங்கள்; 95ஆம் வருடத்தில் 8 படங்கள் என நடித்துக் குவித்தார் அவர்.
பாதை மாற்றம்:
இம்மாதிரியான சூழலில் யாருமே தொடர்ந்து சினிமாவில்தான் தீவிர கவனம் செலுத்தியிருப்பார்கள். ஆனால், ராதிகா சற்று நிதானமாக யோசித்தார். இப்படியே எவ்வளவு நாள் ஓட முடியும்? முதல் குழந்தையான ரெயான் பிறந்து சில மாதங்களே ஆகியிருந்தன. பாதையை மாற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தார் ராதிகா.
அந்த யோசனையில் பிறந்ததுதான் ராடன் டிவி. தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரிக்கும் நிறுவனம். ஜெயா டீவியின் முந்தைய அவதாரமான ஜேஜே டிவியில் பாலைவனப் புயல் என்ற தொடரைத் தயாரித்தார் ராதிகா. ஏகப்பட்ட இழப்பு. எதிர்பாராத இழப்பு.
"நிறைய பேர் நான் டிவிக்கு செல்லக்கூடாது என்று சொன்னார்கள். ஆனால், என் தொழில்வாழ்க்கை என் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். நான் எதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோமோ அதைச் செய்ய முடியும் என்று தோன்றியது.
அப்படித்தான் டிவியில் நுழைந்தேன்" என்று துவங்குகிறார் ராதிகா.
ஆனால், ஒரு நடிகை தொலைக்காட்சி நிறுவனத்தைத் துவங்கி வெற்றிகரமாக தொடரைத் தயாரித்து அளிப்பார் என்ற நம்பிக்கை யாருக்கும் இல்லை. வங்கிகள், சேனல்கள் யாரும் நம்பவில்லை.
"ஒரு நடிகையாக என்னை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், வேலை என்று வரும்போது நீங்கள்ளாம் என்ன செய்ய முடியும் என்று ஆரம்பிப்பார்கள்.
நடிகைகளால் எதுவும் முடியாது என்று நினைப்பா்கள். என்னால் முடியும் என்று நிரூபிப்பதுதான் மிகப்பெரிய சவாலாக இருந்தது. அந்த சவாலை நான் ஏற்றுக்கொண்டேன்" என்கிறார் ராதிகா.
ராதிகா முதலில் எடுத்த தொலைக்காட்சித் தொடர் தோல்வியில் முடிந்திருந்தது. அந்த காலகட்டத்தில்தான் இந்தி மெகா தொடர்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, வெளியாகிக்கொண்டிருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக மெகா தொடர்களின் முகம் மாறிக்கொண்டிருந்தது.
சித்தியில் தொடங்கிய சின்னத்திரை பயணம்:
"கலாநிதி மாறன் என்னுடைய நல்ல நண்பர். ஆனால், என்னால் ஒரு சீரியலை தயாரிக்க முடியும் என்று நம்பவைக்க சில வருடங்கள் பிடித்தன" என்று நினைவுகூர்கிறார் ராதிகா.
அப்படி உருவான தொடர்தான் ’சித்தி’. சன் தொலைக்காட்சியில் தினமும் இரவில் ஒளிபரப்பான இந்தத் தொடர், மூன்று ஆண்டுகள் ஓடியது.
இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட பிராந்திய மொழி தொலைக்காட்சித் தொடர் என்ற பெருமையும் இந்தத் தொடருக்கு உண்டு.
தெலுங்கு மற்றும் சிங்கள மொழிகளிலும் இந்தத் தொடர் மொழிமாற்றம்செய்யப்பட்டு ஒளிபரப்பானது. உண்மையில் அந்தத் தொடருக்குப் பிறகு ராடன் நிறுவனம் தொலைக்காட்சித் தொடர்களின் போக்கையே மாற்றியது.
அதற்குப் பிறகு, ராதிகாவுக்கு முன்னோக்கிய பயணம்தான்.
"இந்தப் பயணத்தில் நடிகையாக இருப்பது உதவியிருக்கும் என பலரும் நினைக்கலாம். ஆனால், அதுதான் எனக்கு பெரிய தடையாக இருந்தது. நடிகைகளுக்கு மூளையே இவ்வளவுதான் என்று பலரும் நினைத்தார்கள்" என்று நினைவுகூர்கிறார் ராடன் மீடியா ஒர்க்ஸின் நிர்வாக இயக்குனரான ராதிகா.
’தொடர்’ வெற்றிகள்:
அதற்குப் பிறகு, அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி என தொடர்ச்சியாக 17 ஆண்டுகளாக தமிழ்த் தொலைக்காட்சியில் கோலோச்சிவருகிறார் ராதிகா. தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரிக்கும் ராடன் மீடியா ஒர்க்ஸின் கடந்த ஆண்டு விற்று முதல் மட்டும் சுமார் 35 கோடி ரூபாய்.
1978ல் கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகமான ராதிகா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் 210க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இன்னமும் நடித்துக்கொண்டும் இருக்கிறார்.
1994ல் தனிநபர் நிறுவனமாக துவங்கப்பட்ட ராடன் டிவி, 1999ல் கார்ப்பரேட் நிறுவனமானது. இந்த நிறுவனத்தின் மிக வெற்றிகரமான தொடர்களில் மையப் பாத்திரமாக ஒரு வலிமையான பெண்ணே இருப்பதாக கதைகள் இருக்கும். "பெண்கள்தான் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கிறார்கள் என்பது இதற்குக் காரணமல்ல. உண்மையில் எங்கள் தொடர்களை அதிகம் பார்ப்பது ஆண்கள்தான்" என்கிறார் ராதிகா.
திட்டமிடலில் ராணி:
விளையாட்டுப் பெண்ணாக சினிமாவில் நடிக்கத் துவங்கிய ராதிகா, தற்போது மிகத் திட்டமிட்டு வேலை பார்க்கும் ஒரு நபர். சினிமா, தொலைக்காட்சித் தொடர்கள், அலுவலகம் என்று மிக பரபரப்பாக இருந்தாலும் 6 மணிக்கு மேல் வேலை பார்ப்பதில்லை.
பல தொடர்களைத் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், நடிகை, ஒரு அரசியல் தலைவரின் மனைவி என பரபரப்பாக இருக்கும் ராதிகா, "ஆண்களைவிடப் பெண்களால் நேரத்தை சிறப்பாக கையாள முடியும்" என்கிறார்.
"என் வாழ்க்கையில் எதையும் திட்டமிட்டு செய்ததில்லை. நான் நடிகையானது, தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க ஆரம்பித்தது, தயாரிக்க ஆரம்பித்தது எல்லாமே அந்த நேரத்தில் முடிவெடுத்து உழைத்ததுதான். தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்." என்கிறார் ராதிகா.
உண்மையில் தான் எதிர்கொள்ளும் சவால்கள், தான் தேர்வு செய்த பாதையினால் வந்தவை என்கிறார் அவர். வெறும் நடிகையாக மட்டும் இருந்திருந்தால், இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்காது. ஆனால், இந்த உயரத்தையும் எட்டியிருக்க முடியாது என்கிறார் ராதிகா.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் எம்.ஆர். ராதாவுக்கும் இலங்கைத் தமிழரான கீதாவுக்கும் 1963ல் கொழும்பு நகரில் பிறந்தவர் ராதிகா. 1978ல் நடிக்க ஆரம்பித்து இப்போது நடித்துக்கொண்டிருக்கும் ராதிகா, சின்னத் திரை தொடர்களைத் தயாரிக்கும், டிவி கலை நிகழ்ச்சிகளை நடத்திக்கொடுக்கும் நிறுவனமான ராடன் மீடியா ஒர்க்ஸின் தலைவர். இவரது கணவர் சரத்குமார் பிரபல நடிகர், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர்.
English Summary:
The Tamil film personalities deemed to be very masculine, small cinema is very rare for women to succeed. Especially for women, the 'alienation' of acting, singing, except for some industries such as directors, producers will succeed in the work activity of women is small.
But Radhika is an exceptional success story.
ஆப்கன்: காபூல் மசூதியில் தற்கொலை குண்டு தாக்குதல், 27 பேர் பலி
ஆப்கன் தலைநகர் காபூலிலுள்ள ஷியா முஸ்லிம் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று காவல் துறையினர் கூறுகின்றனர்.
பக்கிர் உல் ஒலும் மசூதியில் நடந்த இந்த தாக்குதலால் 35 பேர் காயமடைந்துள்ளனர்.
மசூதிக்கு உள்ளே நடந்து வந்த தற்கொலை தாக்குதல்தாரி, கட்டடத்திற்குள்ளே வைத்து குண்டை வெடிக்க செய்ததாக தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
இந்த தாக்குதலை நடத்தியதற்கு இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை.
பாகிஸ்தான் மற்றும் இராக் நாடுகளில் காணப்படும் வகுப்புவாத வன்முறை போல ஆப்கானிஸ்தானில் பெருமளவு இல்லை.
ஆப்கானிஸ்தான் மக்கள் தொகையில் 15 சதவீதத்தினர் ஷியா முஸ்லிம்கள்.
கடந்த ஜூலை மாதம் ஷியா முஸ்லிம்கள் காபூலில் நடத்தியதொரு போராட்டத்தில், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினர் நடத்தியதாக உரிமை கோரப்பட்ட தாக்குதலில், 80 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary:
The Shiite Muslim mosque in the Afghan capital Kabul, a suicide bomb attack that killed at least 27 people, police say.
பக்கிர் உல் ஒலும் மசூதியில் நடந்த இந்த தாக்குதலால் 35 பேர் காயமடைந்துள்ளனர்.
மசூதிக்கு உள்ளே நடந்து வந்த தற்கொலை தாக்குதல்தாரி, கட்டடத்திற்குள்ளே வைத்து குண்டை வெடிக்க செய்ததாக தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
இந்த தாக்குதலை நடத்தியதற்கு இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை.
பாகிஸ்தான் மற்றும் இராக் நாடுகளில் காணப்படும் வகுப்புவாத வன்முறை போல ஆப்கானிஸ்தானில் பெருமளவு இல்லை.
ஆப்கானிஸ்தான் மக்கள் தொகையில் 15 சதவீதத்தினர் ஷியா முஸ்லிம்கள்.
கடந்த ஜூலை மாதம் ஷியா முஸ்லிம்கள் காபூலில் நடத்தியதொரு போராட்டத்தில், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினர் நடத்தியதாக உரிமை கோரப்பட்ட தாக்குதலில், 80 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary:
The Shiite Muslim mosque in the Afghan capital Kabul, a suicide bomb attack that killed at least 27 people, police say.
நேரடி போருக்கு தயார் பாக்., தளபதி திமிர் பேச்சு
இஸ்லாமாபாத்:''பாக்., ராணுவம் நேரடி போரு க்கு எப்போதும் தயாராக உள்ளது; உலகின் எந்த ராணுவத்திற்கும் சளைத்தது அல்ல,'' என, பாக்., ராணுவ தளபதி ரஹீல் ஷெரிப் கூறியுள்ளார்.சமீபத்தில் நம் ராணுவம், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தி, பயங்கரவாத முகாம்களை அழித்தது.
'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' எனப் பெயரிடப்பட்ட இந்த துல்லிய தாக்குதல் சம்பவத்துக்கு பின், இந்திய எல்லையோர கிராமங்களில்,பாக்., ராணுவம் தாக்குதல் நடத்துவது அதிகரித்து உள்ளது.
இதற்கு பதிலடி தரும் வகையில், நம் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் நம் ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில், ஏழு பாக்., வீரர்கள் கொல்லப்பட்டனர்; அவர்களது இறுதி சடங்கில், பாக்., ராணுவ தளபதி ரஹீல் ஷெரிப் பங்கேற்றார்.இந்நிலையில்,அவர் கூறியதாவது:
உலகின் எந்த ஒரு ராணுவத்திற்கும், பாக்., ராணுவம் சளைத்தது அல்ல; எந்த ஒரு தாக்குதலை யும் எதிர்கொள்ளும் திறன் உடையது. தாய் நாட்டை காக்க, எங்கள் வீரர்கள், தாக்குதலை
துணிந்து சந்தித்து வருகின்றனர்.
எல்லையருகே பணியாற்றும் வீரர்களின் வீரம், பாராட்டத்தக்கது. நேரடி போருக்கும், பாக்., ராணுவம் தயாராக உள்ளது; அதிலும் வெற்றி பெறுவோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
English Summary:
'' Bach., Military Direct is always ready to battle; The world in which army not overwrought, '' as Bach., Said army chief rahil sheriff.
இதே நாளில் அன்று
1694 - நவம்பர் 21பிரெஞ்சு புரட்சிக்கு துாண்டுகோலாக இருந்த, எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் வோல்ட்டயர். பிரான்ஸ் நாட்டின், பாரீஸ் நகரில் பிறந்தார்; இயற்பெயர், பிரான்சுவா - -மாரீ அரூவே.எழுத்தாளரான இவர், நாடகம், கவிதை, புதினம், கட்டுரை, வரலாறு, அறிவியல் உள்ளிட்ட, பல படைபுக்களை இயற்றினார்; 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் எழுதியுள்ளார்.மத சுதந்திரம் மற்றும் நையாண்டிக்கு புகழ் பெற்றவர். இறுக்கமான தணிக்கை விதிகளும், அவற்றை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் இருந்த போதும், வெளிப்படையாக பேசும் சமூக சீர்திருத்த ஆதரவாளராக இருந்தார்.தன் படைப்புகள் மூலம் அக்காலத்து கத்தோலிக்கத் திருச்சபைக் கோட்பாடுகளையும், பிரெஞ்சு நிறுவனங்களையும் விமர்சனம் செய்து வந்தார். 1778 மே, 30ல் இறந்தார்.வோல்ட்டயர் பிறந்த தினம் இன்று!
English Summary:
1694 - On November 21, the French Revolution was inspiration characters Voltaire owner. The country of France, was born in Paris; Born, Francois
காபூல் மசூதியில் குண்டுவெடிப்பு : 25 பேர் பலி
காபூல் : ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதலில் 25 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

குண்டுவெடிப்பு :
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் உள்ள பக்கிர் மசூதியில் இன்று பகல் 12.30 மணியளவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 25-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும், சுமார் 30 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
English Summary:
The deadly blast in a mosque in the city of Kabul, Afghanistan, 25 people have died in the attack. Many people were also injured.

குண்டுவெடிப்பு :
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் உள்ள பக்கிர் மசூதியில் இன்று பகல் 12.30 மணியளவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 25-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும், சுமார் 30 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
English Summary:
The deadly blast in a mosque in the city of Kabul, Afghanistan, 25 people have died in the attack. Many people were also injured.








