Monday, 27 March 2017
ஆபாச பேச்சு புகார்: கேரள அமைச்சர் ராஜினாமா
திருவனந்தபுரம்: பெண்ணுடன் போனில் ஆபாச பேச்சு பேசியதை தொடர்ந்து கேரள போக்குவரத்து துறை அமைச்சர் ஏ.கே. சசிந்திரன், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கேரள மாநில போக்குவரத்து அமைச்சராக இருப்பவர் ஏ.கே. சசிந்திரன். இவர் 5 முறை எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார். இவர், தன்னிடம் புகார் அளிக்க வந்த பெண் ஒருவருடன் மொபைல் போனில் மிகவும் ஆபாசமாக பேசியதாக தனியார் டிவி செய்தி வெளியிட்டது. அவரது பேச்சு அடங்கிய ஆடியோவையும் ஒளிபரப்பியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அவர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்தன. ஆனால் தன் மீதான புகாரை அமைச்சர் மறுத்தார்.
இந்நிலையில், கோழிக்கோட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் சசிந்திரன், பதவியை ராஜினாமா செய்கிறேன். அரசியல் நாகரிகம் கருதி பதவி விலகுகிறேன். பிரச்னை தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கேரள மாநில போக்குவரத்து அமைச்சராக இருப்பவர் ஏ.கே. சசிந்திரன். இவர் 5 முறை எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார். இவர், தன்னிடம் புகார் அளிக்க வந்த பெண் ஒருவருடன் மொபைல் போனில் மிகவும் ஆபாசமாக பேசியதாக தனியார் டிவி செய்தி வெளியிட்டது. அவரது பேச்சு அடங்கிய ஆடியோவையும் ஒளிபரப்பியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அவர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்தன. ஆனால் தன் மீதான புகாரை அமைச்சர் மறுத்தார்.
இந்நிலையில், கோழிக்கோட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் சசிந்திரன், பதவியை ராஜினாமா செய்கிறேன். அரசியல் நாகரிகம் கருதி பதவி விலகுகிறேன். பிரச்னை தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.246 கோடி டிபாசிட்: திருச்செங்கோடு நபரிடம் விசாரணை
சென்னை: ரூபாய் நோட்டு வாபசை தொடர்ந்து, ரூ.246 கோடி டிபாசிட் செய்த திருச்செங்கோட்டை சேர்ந்த நபர் ஒருவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.கிராமப்புறங்களில்..:
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த நவம்பர் 8 ம் தேதி ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து சென்னை, புதுச்சேரியில் மட்டும் தனியார் நிறுவனங்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட தனி நபர்கள் வஙகிகளில் ரூ.600 கோடிக்கும் மேல் டிபாசிட் செய்தனர். இதில் பெரும்பாலான பணம் கிராமப்புறங்களில் டிபாசிட் செய்யப்பட்டது. சென்னையில் கொஞ்சம் பணமும், புறநகர் பகுதிகள், நகரங்கள் ஒட்டிய பகுதிகளிலும் பணம் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.
பிடி இறுகும்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த ஒருவர், அரசு வங்கி கிளையில் ரூ.246 கோடி டிபாசிட் செய்துள்ளார். அவரை தொடர்ந்து 15 நாளுக்கு மேல் கண்காணித்தோம். அதில், அவர் கிராமப்புறத்தில் உள்ள வங்கி கிளையில் பணம் டிபாசிட் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் பணம் டிபாசிட் செய்ததை மறைக்க முயற்சி செய்தார். தொடர்ந்து விசாரணையில், பணம் இருப்பதை ஒப்புக்கொண்ட அவர், பிரதமரின் கரீப் கல்யான் யோஜனா(பிஎம்ஜிகேஓய்) திட்டத்தில் இணையவும், டிபாசிட் செய்த பணத்தில் 45 சதவீதம் அபராதமாக கட்டவும் ஒப்புக்கொண்டார். அவர் பழைய ரூபாய் நோட்டுகளில் டிபாசிட் செய்துள்ளார். இதேபோல் கணக்கில் வராத பணத்தை டிபாசிட் செய்தவர்கள் பிஎம்ஜிகேஓய் திட்டத்தில் இணைய ஒப்புக்கொண்டனர். இந்த திட்டத்திற்கு இறுதி நாளான மார்ச் 31 க்குள் இந்த திட்டத்தில் இணைய ஏராளமானவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். கணக்கில் வராத பணம் ரூ. ஆயிரம் கோடியை தாண்டும் என நம்புகிறோம். கணக்கில் வராத பணத்தை காட்டாதவர்கள் மீதான பிடி ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு இறுகும்.
பதிலில்லை:
நாடு முழுவதும் 85 லட்சம் வங்கிக்கணக்குகளில் சந்தேகத்திற்குரிய வகையில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டும்28 ஆயிரம் வங்கிக்கணக்குகளில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு இமெயில் மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பலர் பதிலளித்த விட்டனர். இன்னும் சிலமுறை பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் பதிலளிக்கவில்லை. அவர்கள் அரசின் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டால் 45 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். மேலும் 25 சதவீதம் அரசிடம் வட்டியில் இல்லாமல் குறி்ப்பிட்ட ஆண்டுகளுக்கு இருக்கும். கணக்கில்வராத பணத்தை நாங்கள் கண்டுபிடித்தால் 83.5 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் கமல் மீது கர்நாடகாவில் புகார்
பெங்களூரு: மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசியதாக நடிகர் கமல்ஹாசன் மீது சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நெல்லை கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், பெங்களூருவிலும் கமல் மீது புகார் அளிக்கப்பட்டது. பசவேஸ்வர மடத்தை சேர்ந்த பிரனவானந்தா என்பவர் பெங்களூரு போலீஸ் ஸ்டேசனில் கமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார்.அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி; 13 பேர் காயம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் ஓஹியோ மாகாணம், சின்சினாட்டி நகரில் இரவு விடுதியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் 13 பேர் காயமடைந்தனர். ஒருவர் பலியானார். தொடர்ந்து அந்த இரவு விடுதியை சுற்றி வளைத்துள்ள போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆர்.கே.நகரில் சிக்கிய அமைச்சர்கள்
சென்னை: சென்னை, ஆர்.கே.நகர் சேனியம்மன் கோவில் தெருவுக்கு, தேர்தல் பிரசாரத்துக்காகச் சென்ற அமைச்சர்கள் உதயக்குமார் மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணனை அங்கிருக்கும் மக்கள் பிடித்து வைத்த சம்பவம், பிரசாரத்துக்குச் செல்லும் மற்ற அமைச்சர்களை கிலியில் ஆழ்த்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் மருது கணேஷ், அ.தி.மு.க., புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் முன்னாள் அமைச்சர் மதுசூதனன், அ.தி.மு.க., அம்மா அணி சார்பில், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் தினகரன், தீபா பேரவை சார்பில் தீபா உள்ளிட்ட பலரும் போட்டியிடுகின்றனர்.
தமிழகத்தின், 33 அமைச்சர்களும், ஆர்.கே.நகரில் முகாமிட்டு, தொடர்ந்து அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதாக, தி.மு.க., தொடர்ந்து புகார் சொல்லி வருகிறது. தெரு தெருவாக நிறுத்தப்பட்டிருக்கும் அமைச்சர்கள், தெருவில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் நன் கொடை வழங்குவதாகக் கூறி வருகின்றனர்.
சர்வ சாதாரணமாக வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். சமீபத்தில், தொகுதிக்குள் உள்ள சேனியம்மன் கோவிலுக்கு வந்த அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணனும், உதயக்குமாரும், அங்கு இருந்த, 500க்கும் அதிகமான மக்களை வரவழைத்து, உங்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டிக் கொடுக்க தீர்மானித்துள்ளோம். உங்கள் ரேஷன் கார்டு அல்லது ஆதார் கார்டை இணைத்து, எங்கள் பெயருக்கு, விண்ணப்ப மனு கொடுங்கள். அதை பரிசீலித்து, எல்லோருக்கும் வீடு வழங்குகிறோம். யாரும் ஓட்டுப் போடாமல் இருந்தால், அவர்கள் இந்த திட்டத்தில் இருந்து விலக்கப்படுவர் என்று சொல்லியிருக்கின்றனர்.
அதன்படி கோரிக்கை விண்ணப்ப மனுக்களோடு அமைச்சர்களை மக்கள் சந்தித்து பேசியுள்ளனர் பொதுமக்கள். அப்போது மக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக, வேகமாக தகவல் பரவியது. இப்படி தகவல் பரவியதும், ஒரு பக்கம் பொதுமக்களும், இன்னொரு பக்கம் ஓ.பி.எஸ்., அணியினரும், அந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். கொஞ்ச நேரத்தில், அங்கே பிரச்னை ஏற்பட்டுள்ளது. தள்ளுமுள்ளு, கலாட்டா நடக்க, வீடு கட்டிக் கொடுக்கக் கேட்டு, எழுதிக் கொடுத்த விண்ணப்பங்களையெல்லாம் பறித்து கிழித்தெறிந்தனர்.
அங்கே, இரு தரப்புக்கும் கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானதும், பாதுகாப்பு போலீசாருடன், இரு அமைச்சர்களும் எஸ்கேப் ஆகி விட்டனர். இந்த விஷயத்தை கேள்விபட்ட வேட்பாளர் தினகரன், எல்லா அமைச்சர்களையும், முக்கிய நிர்வாகிகளையும் அழைத்துப் பேசியுள்ளார்; சாதுர்யம் இல்லாமல் காரியம் செய்வதாலேயே இப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படுவதாக வருத்தப்பட்டு, அமைச்சர்களை கடிந்து கொண்டாராம்.அடுத்தடுத்த நாட்களில், அ.தி.மு.க., அம்மா அணியினரோடு, பொதுமக்களும், மற்றக் கட்சியினரும் கடும் மல்லுக்கட்டுக்குத் தயாராகி வருவதாக, தினகரன் தரப்புக்கு தகவல் கிடைத்து, போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனராம். களத்தில் மற்ற வேட்பாளர்களைப் போல, தினகரனும் அமைதியாக ஓட்டு சேகரித்து சென்றால் பிரச்னை இல்லை. பரிசுப் பொருட்கள் விஷயத்தில், தீவிர ஆர்வம் காடினால், தினகரனுக்கு, தொகுதிக்குள் பிரச்னை ஏற்படும் என்றும், போலீஸ் தரப்பிலேயே எச்சரிக்கை மணி அடித்துள்ளனராம். இதனால், ஆர்.கே.நகர் தொகுதியில் நாளுக்கு நாள் டென்ஷன் அதிகரிக்கத் துவங்கி உள்ளது.இதனால், பிரசாரத்தில் நிதானித்துச் செல்கிறாராம் தினகரன்.








