டோக்கியோ: ஜப்பானில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது; எனினும், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படாததால், மக்கள் நிம்மதி அடைந்தனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து, 350 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள, ஹோன்ஷூ தீவில், நேற்று காலை, 6:42 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில், 44 கி.மீ., ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டது. ரிக்டர் அளவில், 6.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட உயிர் சேதம், காயம் மற்றும் பொருட்சேதம் குறித்து உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படாததால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
Sunday, 13 November 2016
ஆப்கனில் குண்டு வெடிப்பு
காபூல் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில், நேற்று நடந்த குண்டு வெடிப்பில், நான்கு பேர்பலியாயினர். ஆசிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில், அல் - குவைதா பயங்கரவாதிகளை ஒடுக்க, அமெரிக்க அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் பயனாக, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பலரும் கொல்லப்பட்டனர்; பயங்கரவாத முகாம்களும் அழிக்கப்பட்டன. இந்நிலையில், காபூல் நகரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில், நேற்று திடீரென குண்டு வெடித்தது; இதில், நான்கு பேர் பலியாயினர். இறந்தவர்கள் யார் என்ற விபரம் தெரியவில்லை. இந்த தாக்குதலுக்கு, தலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
பாதுகாப்பு குறைபாடு : காரணமாகவே, குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, விரிவான விசாரணை நடத்தப்படும் என, ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு குறைபாடு : காரணமாகவே, குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, விரிவான விசாரணை நடத்தப்படும் என, ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது.
'எச்., 1 - பி விசா'வுக்கு கட்டுப்பாடு : புதிய அதிபர் டிரம்ப் திட்டம்

இதுகுறித்து, தெற்காசியா குறித்து ஆய்வு செய்து வரும், 'ஹெரிட்டேஜ் பவுண்டேஷன்' ஆய்வாளர் லிசா கூறியதாவது: இந்தியா - அமெரிக்கா இடையே, சில ஆண்டுகளாக இணக்கமான உறவு நிலவுகிறது. பயங்கரவாத பிரச்னை உள்ளிட்ட விஷயங்களில், புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள டிரம்பின் நடவடிக்கைகள், இந்த உறவுக்கு வலு சேர்க்கும். அதே சமயம், எச்., 1 - பி விசா விஷயத்தில், டிரம்ப் விடாப்பிடியாக உள்ளார்; பதவியேற்ற பின், இதுதொடர்பான அறிவிப்புகளை அவர் வெளியிடலாம். இந்தியர்களை நேரடியாக பாதிக்கும் இந்த பிரச்னை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அவர், அமெரிக்க தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுத்தாலும், இது அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவது சந்தேகமே. இவ்வாறு அவர் கூறினார்.
காப்பீட்டில் மாற்றம் : அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் பயனடையும் வகையில், தற்போதைய அதிபர் ஒபாமா, 'ஒபாமா கேர்' என்ற பெயரில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்தினார். ஆனால், 'இது அதிக செலவு பிடிக்கும் திட்டம்' எனக் கூறி, காப்பீட்டு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 'நான் அதிபரானால் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மாற்றியமைப்பேன்' என, டிரம்ப் பிரசாரம் செய்தார்; எனவே, அவர் பதவியேற்ற பின், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என கூறப்படுகிறது.
மகன், மகளுக்கு பதவி : அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள டிரம்ப், அதிபரின் வெள்ளை மாளிகை நிர்வாகத்தை கவனிக்க, துணை அதிபராக பொறுப்பேற்க உள்ள, மைக் பென்ஸ் தலைமையில் குழுவை அறிவித்துள்ளார். அதிபரின் செயல்பாடுகளை தீர்மானிக்கும் இக்குழுவில், டிரம்ப்பின் மகன்கள், ஜூனியர் டிரம்ப், எரிக் டிரம்ப், மகள் இவாங்கா டிரம்ப், ஆகியோருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், டிரம்ப் சார்ந்துள்ள குடியரசு கட்சியின் நிர்வாகிகள் சிலரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
அதிவேக புல்லட் ரயிலில் மோடி பயணம்
டோக்கியோ:பிரதமர் மோடி, ஜப்பான் பயணத் தின் ஒரு பகுதியாக, அதிவேக புல்லட் ரயிலில் பயணம் செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, கிழக்காசிய நாடான ஜப்பானுக்கு, மூன்று நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்; அவர், ஜப்பான் மன்னர் அகிஹிட்டோவை சந்தித்து, இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசித்தார்.
இதன்பின், அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேயை, மோடி, சந்தித்து பேசினார்; அப்போது, இரு நாடு களிடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க, அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதைத் தொடர்ந்து, நேற்று, ஜப்பான் தலைநகர் டோக்கியோவை,கோபேவு நகருடன் இணைக் கும், புல்லட் ரயிலில், ஜப்பான் பிரதமர் ஷின் சோ அபே வுடன் மோடி பயணம் செய்தார். 'ஷின்கான்சன்' என்ற இந்த புல்லட் ரயில்,
மணிக்கு, 240 முதல் 320 கி.மீ., வேகத்தில் சென்றது. ரயிலில் ஜப்பான் பிரதமர் அபேவுடன் பேசியபடி பயணிக்கும் புகைப்படங்களை, சமூக வலை தளமான, 'டுவிட்டர்' பக்கத்திலும் பிரதமர் மோடி வெளியிட்டார்.
இதே ரயில், இந்தியாவில், மும்பை - ஆமதா பாத் இடையே அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள், 2018ல் துவங்குகிறது; 2023ல், புல்லட் ரயில்களை இயக்க திட்டமிடப் பட்டுள்ளது.
முன்னதாக, அந்நாட்டு தொழிலதிபர்களுடன், மோடி பேசினார். அப்போது, ''இந்தியா - ஜப்பான் இடையே
தொழில்உறவு அதிகரித்து வருகிறது;இருநாட்டு தொழில் நிறுவனங்களுக்கும்,இது பயனளிக்கும்,'' என்றார்.

இதன்பின், அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேயை, மோடி, சந்தித்து பேசினார்; அப்போது, இரு நாடு களிடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க, அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதைத் தொடர்ந்து, நேற்று, ஜப்பான் தலைநகர் டோக்கியோவை,கோபேவு நகருடன் இணைக் கும், புல்லட் ரயிலில், ஜப்பான் பிரதமர் ஷின் சோ அபே வுடன் மோடி பயணம் செய்தார். 'ஷின்கான்சன்' என்ற இந்த புல்லட் ரயில்,
மணிக்கு, 240 முதல் 320 கி.மீ., வேகத்தில் சென்றது. ரயிலில் ஜப்பான் பிரதமர் அபேவுடன் பேசியபடி பயணிக்கும் புகைப்படங்களை, சமூக வலை தளமான, 'டுவிட்டர்' பக்கத்திலும் பிரதமர் மோடி வெளியிட்டார்.
இதே ரயில், இந்தியாவில், மும்பை - ஆமதா பாத் இடையே அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள், 2018ல் துவங்குகிறது; 2023ல், புல்லட் ரயில்களை இயக்க திட்டமிடப் பட்டுள்ளது.
முன்னதாக, அந்நாட்டு தொழிலதிபர்களுடன், மோடி பேசினார். அப்போது, ''இந்தியா - ஜப்பான் இடையே
தொழில்உறவு அதிகரித்து வருகிறது;இருநாட்டு தொழில் நிறுவனங்களுக்கும்,இது பயனளிக்கும்,'' என்றார்.
தமிழக இளைஞருக்கு அமெரிக்காவில் விருது
அமெரிக்காவில், தமிழக வம்சாவளி இளைஞரான கிருபா புஷ்பராஜுக்கு, 'சிறந்த வழக்கறிஞர்' விருது வழங்கப்பட்டது.

தமிழக வம்சாவளியைச் சேர்ந்த, கிருபா புஷ்பராஜ், தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனின் பேரனும், நா.புஷ்பராஜ் - மணிமேகலை தம்பதியின் மகனுமாவார். கோவையில் பி.இ., பட்டம் பெற்ற இவர், 2002ல் அமெரிக்கா சென்று, கணினி, மன்னியல் பிரிவில், எம்.எஸ்., பட்டமும், சட்டத்தில், முனைவர் பட்டமும் பெற்று, காப்புரிமை, அறிவுசார்சொத்துரிமை வழக்கறிஞராக உள்ளார்.
கலிபோர்னியா மாகாணத்தில், 'ஸ்கொயர்' எனும் நிறுவனத்தில் சட்டத் துறை இயக்குனராகவும், ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில், பகுதி நேர சட்ட ேபராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார்.கலிபோர்னியாவில், 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில், 'சூப்பர் லாயர் ரைசிங் ஸ்டார்' எனும் விருதை, கிருபா புஷ்பராஜ் பெற்றுள்ளார்.
தற்போது, 2016ம் ஆண்டுக்கான, 40 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான, 'பெஸ்ட் லாயர்' விருது, 'ஏசியன் பசிபிக் அமெரிக்கன் பார் அசோசியேஷன்' வழக்கறிஞர் சங்கத்தால், இவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா சான்டியாகோ நகரில், நவ., 3ல் நடந்த விழாவில், கிருபா புஷ்பராஜுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவில், இவ்விருதை பெறும் முதல் தமிழக இளைஞர் இவர்.

தமிழக வம்சாவளியைச் சேர்ந்த, கிருபா புஷ்பராஜ், தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனின் பேரனும், நா.புஷ்பராஜ் - மணிமேகலை தம்பதியின் மகனுமாவார். கோவையில் பி.இ., பட்டம் பெற்ற இவர், 2002ல் அமெரிக்கா சென்று, கணினி, மன்னியல் பிரிவில், எம்.எஸ்., பட்டமும், சட்டத்தில், முனைவர் பட்டமும் பெற்று, காப்புரிமை, அறிவுசார்சொத்துரிமை வழக்கறிஞராக உள்ளார்.
கலிபோர்னியா மாகாணத்தில், 'ஸ்கொயர்' எனும் நிறுவனத்தில் சட்டத் துறை இயக்குனராகவும், ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில், பகுதி நேர சட்ட ேபராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார்.கலிபோர்னியாவில், 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில், 'சூப்பர் லாயர் ரைசிங் ஸ்டார்' எனும் விருதை, கிருபா புஷ்பராஜ் பெற்றுள்ளார்.
தற்போது, 2016ம் ஆண்டுக்கான, 40 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான, 'பெஸ்ட் லாயர்' விருது, 'ஏசியன் பசிபிக் அமெரிக்கன் பார் அசோசியேஷன்' வழக்கறிஞர் சங்கத்தால், இவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா சான்டியாகோ நகரில், நவ., 3ல் நடந்த விழாவில், கிருபா புஷ்பராஜுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவில், இவ்விருதை பெறும் முதல் தமிழக இளைஞர் இவர்.
டிரம்ப்பிற்கு பான் கி மூன் வாழ்த்து
நியூயார்க் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டொனால்ட் டிரம்பிற்கு ஐ.நா., பொதுச்செயலாளர் பான் கீ மூன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்க அதிபராக இருந்து வரும் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், புதிய அதிபரை தேர்ந்து எடுப்பதற்காக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டனும் (வயது 69), குடியரசு கட்சியின் சார்பில் தொழில் அதிபரான டொனால்டு டிரம்பும் (70) போட்டியிட்டனர்.
இந்நிலையில் வெளியான முடிவுகளின்படி, மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் டிரம்புக்கு 276 தேர்தல் சபை வாக்குகளும், ஹிலாரிக்கு 218 தேர்தல் சபை வாக்குகளும் கிடைத்தன. மாகாணங்களைப் பொறுத்தவரையில் டிரம்ப் 29 மாகாணங்களில் வெற்றி பெற்றார். ஹிலாரி 18 மாகாணங்களில் வெற்றி பெற்றார்.
அடுத்த ஆண்டு (2017) ஜனவரி மாதம் 6-ந் தேதி நடைபெறும் அமெரிக்க பார்லி., கூட்டு கூட்டத்தில் அமெரிக்க அதிபராக டிரம்ப் முறைப்படி அறிவிக்கப்படுவார். அப்போது துணை அதிபரும் அறிவிக்கப்படுவார். அதன்பிறகு ஜனவரி 20-ந் தேதி டிரம்ப், அதிபராக பதவி ஏற்றுக்கொள்வார்.
பார்லி., வளாகத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறும். அதுவரை தற்போதைய அதிபர் ஒபாமா பதவியில் தொடருவார். டிரம்ப் அமெரிக்காவின் 45-வது அதிபர் ஆவார். 70 வயதாகும் டிரம்ப், அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே மிகவும் வயதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.நாட்டின் முன்னேற்றத்துக்கு: இந்நிலையில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் முன்னேற்றத்துக்கு பாடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இவ்வாறு பான் கி மூனின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்க அதிபராக இருந்து வரும் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், புதிய அதிபரை தேர்ந்து எடுப்பதற்காக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டனும் (வயது 69), குடியரசு கட்சியின் சார்பில் தொழில் அதிபரான டொனால்டு டிரம்பும் (70) போட்டியிட்டனர்.
இந்நிலையில் வெளியான முடிவுகளின்படி, மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் டிரம்புக்கு 276 தேர்தல் சபை வாக்குகளும், ஹிலாரிக்கு 218 தேர்தல் சபை வாக்குகளும் கிடைத்தன. மாகாணங்களைப் பொறுத்தவரையில் டிரம்ப் 29 மாகாணங்களில் வெற்றி பெற்றார். ஹிலாரி 18 மாகாணங்களில் வெற்றி பெற்றார்.
அடுத்த ஆண்டு (2017) ஜனவரி மாதம் 6-ந் தேதி நடைபெறும் அமெரிக்க பார்லி., கூட்டு கூட்டத்தில் அமெரிக்க அதிபராக டிரம்ப் முறைப்படி அறிவிக்கப்படுவார். அப்போது துணை அதிபரும் அறிவிக்கப்படுவார். அதன்பிறகு ஜனவரி 20-ந் தேதி டிரம்ப், அதிபராக பதவி ஏற்றுக்கொள்வார்.
பார்லி., வளாகத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறும். அதுவரை தற்போதைய அதிபர் ஒபாமா பதவியில் தொடருவார். டிரம்ப் அமெரிக்காவின் 45-வது அதிபர் ஆவார். 70 வயதாகும் டிரம்ப், அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே மிகவும் வயதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.நாட்டின் முன்னேற்றத்துக்கு: இந்நிலையில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் முன்னேற்றத்துக்கு பாடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இவ்வாறு பான் கி மூனின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஒபாமா சுகாதார காப்பீடு தொடரும்: டிரம்ப்
வாஷிங்டன்:ஒபாமா சுகாதார காப்பீடு தொடரும் என டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் ஒபாமா தனது ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த மிக முக்கியமான திட்டம், சுகாதார காப்பீடு திட்டம். இந்த திட்டத்தின்மூலம் குறைவான கட்டணத்தில் சாமானிய மக்களும் காப்பீடு பலன் பெற வழி பிறந்தது.ஆனால் 'ஒபாமா கேர்' என்னும் இந்த சுகாதார காப்பீடு திட்டத்துக்கு எதிரான கருத்துக்களை டொனால்டு டிரம்ப், தனது தேர்தல் பிரசாரத்தின்போது கூறி வந்தார்.
திடீர் பல்டி:
குறிப்பாக, இந்த திட்டத்தை ரத்து செய்யப்போவதாகவும் தெரிவித்தார்.ஆனால் இப்போது ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில் டிரம்ப், இந்த விஷயத்தில் பல்டி அடித்து விட்டார். 'ஒபாமா கேர்' திட்டத்தின் முக்கிய அம்சங்களை அப்படியே பின்பற்றுவதற்கு திறந்த மனதுடன் இருப்பதாக அவர் கூறி உள்ளார்.
இது குறித்து பத்திரிகைக்கு பேட்டி அளித்த டிரம்ப், “பெற்றோரின் காப்பீட்டில், அவர்களது இளம்பிள்ளைகளும் பலன் பெறுவதை அனுமதிக்கப் போகிறேன்” என்று குறிப்பிட்டார்.ஒபாமா கேர்' திட்டத்தின் முக்கிய அம்சங்களை அப்படியே பின்பற்றுவதற்கு திறந்த மனதுடன் இருப்பதாகவும் ஒபாமாவுடனான சந்திப்புக்கு பின்னர்தான், இந்த முடிவுக்கு வந்துள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.
திடீர் பல்டி:
குறிப்பாக, இந்த திட்டத்தை ரத்து செய்யப்போவதாகவும் தெரிவித்தார்.ஆனால் இப்போது ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில் டிரம்ப், இந்த விஷயத்தில் பல்டி அடித்து விட்டார். 'ஒபாமா கேர்' திட்டத்தின் முக்கிய அம்சங்களை அப்படியே பின்பற்றுவதற்கு திறந்த மனதுடன் இருப்பதாக அவர் கூறி உள்ளார்.
இது குறித்து பத்திரிகைக்கு பேட்டி அளித்த டிரம்ப், “பெற்றோரின் காப்பீட்டில், அவர்களது இளம்பிள்ளைகளும் பலன் பெறுவதை அனுமதிக்கப் போகிறேன்” என்று குறிப்பிட்டார்.ஒபாமா கேர்' திட்டத்தின் முக்கிய அம்சங்களை அப்படியே பின்பற்றுவதற்கு திறந்த மனதுடன் இருப்பதாகவும் ஒபாமாவுடனான சந்திப்புக்கு பின்னர்தான், இந்த முடிவுக்கு வந்துள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.